Sunday, August 5, 2007

இணையத்தில் காதல்


  • கணிப்"பொறி"க்குள்

    நீ வைத்த தேங்காய்காய் துண்டுதான்

    உன் மின்னஞ்சல்….

    விரும்பி நுழையும் எலியாய் நான்..!


  • "மயிலே"

    என்றழைக்கலாம் என்றால் பார்த்ததில்லை…..

    "குயிலே"

    என்றழைக்கலாம் என்றால் பேசியதுமில்லை….

    பின்பு எப்படித்தான் அழைப்பது....?

    "மெயிலே"

    என்றழைத்தால் கோபிக்க மாட்டாயே….?

  • அன்புக்கும் காமத்திற்கும் இடைப்பட்ட புள்ளியில்தான்

    பூக்கிறது காதல் என்றார் வைரமுத்து….

    அடடா….

    அவருக்குத் தெரியாமல் போய் விட்டதே...!

    உன் கணிணிக்கும்

    என் கணிணிக்கும்

    இடையில் கூட அது பூக்கலாம் என்று...!

  • என் கெஞ்சல்

    என் கொஞ்சல்

    எல்லாமே

    மின்னஞ்சலோடு முடிந்து விடுமோ....?


  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..?

    உண்டே...!

    என் GMAIL PASSWORD...!!


  • எல்லா மின்னஞ்சல்களிலும்

    ATTACHMENT இருப்பதில்லை….

    ஆனால் என் எல்லா மின்னஞ்சல்களிலும்

    ஒரு "ATTACHMENT" இருப்பதை கவனித்தாயா..?


  • உரையாடல் அறையில் உரையாடல்..!

    எப்போது

    அறையில் உரையாடல்..?


  • பத்து விரல்களும்

    பித்து பிடித்தது போல் ஆகி விட்டன

    சீக்கரம் வா...

    பேச வேண்டும்…!


  • மனதிலிருக்கும் வார்த்தைகள்

    எப்படியோ வழிதேடி

    விரல் நுனிவரை

    வந்து விடுகின்றன….


  • என் விரல்களுக்கு மட்டும்

    நீ முதலில் பரிச்சயமாகி விட்டாயென்று

    என் விழிகள்

    என்னோடு சண்டையிடுகின்றன….

    அவற்றிற்கும் ஒரு வாய்ப்பு கொடேன்..

  • வலையில் இருக்கிறேன்….

    பிறகு பேசலாம் என்றேன்..!

    நண்பன் கேட்டான்

    யார் வலையில்?


  • வலைக்குள் நீ வந்தாலே

    எளிதாய் அறிகிறேன்….

    என் அறைக்குள் குளிர் அதிகமாகிறதே...!


  • நீ விடைபெறும் ஒவ்வொரு முறையும்

    மரத்தின் கிளையில்

    கடைசி இழையில்

    தொங்கும் இலையின் நிலையில் நான்..!!

  • உன் விரல்களின்

    விசாரிப்பு போதும்

    விழிகளால் எப்போது?

  • மின்னஞ்சல்

    என்ற பெயர் சரிதான்..

    உன் அஞ்சல் படிக்கும்போதே

    மின்சாரம் பாய்கிறதே..!


  • பேராசைதான் ஒப்புக்கொள்கிறேன்….

    வருகிற மின்னஞ்சல் எல்லாம்

    உன்அஞ்சலாக இருக்கக்கூடாதா..?

2 comments:

செ. அன்புச்செல்வன் said...

Unn kavithai tamilukku naan adimai....veryyyyyyyyyy nice.........my friend also read ur kavithai....he said that those r wonderful vers.....very nice da.......i know to write marabu kavithai......i dont know to write like u.....really proud of u...
Minnanjal kavithai is very nice.....

Lakshmi Sahambari said...

Kalllakkal :)