Sunday, August 5, 2007

நீ நான் மற்றும் காதல்-1

  • நீ பேசினால் மயங்குகிறேன் ....!

    குரலை மயிலிறாகால்

    தடவி அனுப்புகிறாயோ?


  • நூறு வார்த்தைகள் பேச வந்தவன்

    வேறு வார்த்தைகள் பேசினேன்...

    வார்த்தைகளா முக்கியம்..?


  • விழியின் வழியே

    வெளியில் வழிகிறது

    தளும்பித் தளும்பிக்

    காதல்..!!


  • உன் இரு விழிநீரைத் துடைக்கும்

    ஒரு விரல்

    எனதாக வேண்டும்

    அன்பே..அன்பே..!

No comments: