நினைக்க மறக்காதீர்கள் மனிதர்களே..!
எயட்ஸ் என்பதன் பொருள்
முன்பதிவு செய்யப்பட்ட மரணம்..!
சலவை செய்ய முடியாத அழுக்கு..!
மறக்க நினைக்காதீர்கள் மானிடர்களே..!
முறையும் உறையும் அற்ற உறவு மலர்ந்தால்-அங்கே
எயட்ஸின் விலாசம் விசாலமாகிறது….!
உணர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே...
நாம் நெருப்பு...!
எச்சில் துப்பியா நம்மை அணைப்பது?
மோகத்தின் தாகத்திற்கு
தேகத்தையா குடிக்கக் கொடுப்பது..?
மனதை மலர்த்தி விடுங்கள் மக்களே..!
ஆற்று நீர் அழுக்கு என்பதற்காக
சமுத்திரம் அதன் சங்கமத்தை மறுப்பதில்லை..
நாம் ஒதுக்க வேண்டியது எய்ஸைதானே தவிர
அதை சுமக்கும் மனிதர்களை அல்ல..!
இதயத்தில் இருப்பு வையுங்கள் இந்தியர்களே..!
ஒழுக்கத்தின் உறைவிடத்தில்
எய்ட்ஸ் ஒட்டடை படிவதில்லை...!
எய்டஸின் விரல்கள் தீண்டாதிருக்க
உணர்ச்சியின் நகங்களை வெட்டி வெயுங்கள்..!
ஏனெனில்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கணிதத்தில்தான்
மனிதத்தின் புனிதம் பூக்கிறது..!!