- அதெப்படி ?
காதல் தோட்டத்தில் மட்டும்
ரோஜாக்கள் குத்தி
முட்கள் காயப்படுகின்றன?
- இசைவே இல்லையென்றாலும்
இரைச்சலான இசையை
இரு கை தட்டி ரசிக்கின்றேன்...
வணக்கம் கூட சொல்லாத நண்பனிடம்
வலியச் சென்று பேசி
வருத்தம் போகச் சிரிக்கின்றேன்..
பிடிக்காத புத்தகங்களைக் கூட
தேடிப்பிடித்து
பக்கம் விடாமல் படிக்கின்றேன்..
ஆனாலும்
மூளையின் மூலையில்
காதலின் காலடி ஓசை
கேட்டுக் கொண்டே இருக்கிறது..!
இப்போதெல்லாம்
நம் உரையாடலின் நடுவில்
வந்தமரும் நீண்ட மௌனத்தின்
கனம் தாங்காமல்
ஊனமாகிப் போகிறேன்...!
- நெருங்கினால் சுடுகிறது..
விலகினால் குளிர்கிறது....
தீயும் நீயும் ஒன்றா?
இருப்பதையெல்லாம்
கொள்ளையடித்த பிறகும்
இயல்பாய் சிரிக்க
எப்படி முடிகிறது உன்னால்?