Saturday, August 25, 2007

நீ நான் மற்றும் காதல்-3

  • ஒரே எழுத்தில்
    கவிதை கேட்டாய்..
    சொன்னேன்..
    "நீ"

  • அன்பைச் சொல்ல
    புன்னகை ஒரு வழி...
    உனக்கு மட்டும் மொழி..!

  • வார்த்தைகளைக் கோர்த்துத் தருகிறேன்...
    உன் வாசிப்பில்
    கவிதையாக்கி விடுகிறாய்...!

  • ஜன்னலோர ரயில்பயணம்
    மழைக்கால தேநீர்
    பெளர்ணமி இரவில் கடற்கரை
    மார்கழி காலையில் கோவில்
    சிலுசிலு காற்றில் மொட்டைமாடி
    மழை நின்ற இரவில் சிறுநடை
    பின்னிரவில் பழையபாடல்
    நீண்டபயணத்தில் சுகமான இசை
    இவை எதையுமே ரசிக்க முடியவில்லை
    அருகில் நீ இல்லாமல்..!

1 comment:

Lakshmi Sahambari said...

//
வார்த்தைகளைக் கோர்த்துத் தருகிறேன்...
உன் வாசிப்பில்
கவிதையாக்கி விடுகிறாய்...!
//

:-)