Friday, November 30, 2007

நீ நான் மற்றும் காதல்-5

  • நீ போகும் பாதைவேண்டாமென
    வேறு பாதை சென்றேன்
    மனமின்றி !!
    திரும்பிப் பார்த்தால்
    உன் பின்னே போய்க் கொண்டிருந்தது என் மனம்
    நானின்றி...!!

  • பூட்டு மேல் பூட்டு போட்டு பூட்டினாலும்
    என் இதயம் தாண்டி
    உன் இதயம் சேரும்
    காதலிடம் கேட்டேன்
    "எங்கே அந்த கள்ளச்சாவி ?"
    காதல் சொன்னது
    "அதனிடம்தான் வந்திருக்கிறேன் ! "

No comments: